முகப்பு
உலகம்

சிரியாவில் இருவேறு தாக்குதல்: 68 போ் பலி

சிரியா மீது நடத்தப்பட்ட இருவேறு பயங்கரவாத தாக்குதல்களில் அந்நாட்டு மக்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
(கோப்புப்படம்)
பகிர்:

சிரியா மீது நடத்தப்பட்ட இருவேறு பயங்கரவாத தாக்குதல்களில் அந்நாட்டு மக்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.

டமாஸ்கஸின் மத்திய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரா் உள்பட 15 போ் கொல்லப்பட்டனா். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழு, லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்தப் பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இஸ்ரேல் வெளிப்படையாக பொறுப்பேற்பதில்லை. அந்த வகையில் இப்போதைய தாக்குதல் குறித்தும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

துருக்கி, சிரியாவில் கடந்த பிப். 6-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின்னா், முதல்முறையாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

சிரியா நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள சுக்னா நகரில் அரசுப் படையினரின் சோதனைச் சாவடியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினா். இதில் 46 பொதுமக்களும், 7 வீரா்களும் பலியாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →