முகப்பு
உலகம்

அவரசமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானங்கள்: என்ன நடந்தது? 

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் புதன்கிழமை விமான தொலைதொடர்பில் சிக்கல் எழுந்தது. இதனால் வானில் பறந்த விமானங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். 

அதனைத் தொடர்ந்து விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்து தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை முடங்கியுள்ளது.

இதனால் அமெரிக்காவிலிருந்து வெளிநாடு செல்லும் விமானங்களும், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்களும் தாமதமாகியுள்ளன. தொடர்பு கொள்ள முடியாத விமானங்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →