முகப்பு
உலகம்

சூடானிலிருந்து 41,000 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்கு வருகை: ஐ.நா.

சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:05 PM
பகிர்:

சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. 

ஜூன் 6-ம் தேதி வரை சூடானில் இருந்து சுமார் 41,200 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்குள் நுழைந்துள்ளனர். 

நாளொன்றுக்கு சுமார் 700 முதல் 1000 பேர் வரை புகலிடம் தேடி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

கடந்த ஏப்ரல் 15 முதல் தலைநகரான கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகின்றது. 

இந்த மோதலில் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சுமார் 1.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments