உலகம்

சூடானிலிருந்து 41,000 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்கு வருகை: ஐ.நா.

சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. 

ஜூன் 6-ம் தேதி வரை சூடானில் இருந்து சுமார் 41,200 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்குள் நுழைந்துள்ளனர். 

நாளொன்றுக்கு சுமார் 700 முதல் 1000 பேர் வரை புகலிடம் தேடி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஏப்ரல் 15 முதல் தலைநகரான கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகின்றது. 

இந்த மோதலில் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சுமார் 1.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT