உலகம்

சூடானிலிருந்து 41,000 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்கு வருகை: ஐ.நா.

சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. 

ஜூன் 6-ம் தேதி வரை சூடானில் இருந்து சுமார் 41,200 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்குள் நுழைந்துள்ளனர். 

நாளொன்றுக்கு சுமார் 700 முதல் 1000 பேர் வரை புகலிடம் தேடி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஏப்ரல் 15 முதல் தலைநகரான கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகின்றது. 

இந்த மோதலில் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சுமார் 1.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT