இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இவருக்கு வயது 86. பெர்லுஸ்கோனி கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.
1994 முதல் 2011 வரை 4 முறை அவரது தலைமையில் ஆட்சி நடந்தது. இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.
பெர்லுஸ்கோனியின் மரணம் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது என்றும் இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.