உலகம்

நேபாளத்தில் கனமழையினால் நிலச்சரிவு: 5 பேர் பலி; மேலும் 28 பேரைக் காணவில்லை

நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர், மேலும் காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

DIN

நேபாளத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர், மேலும் காணாமல் போன 28 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா, தப்லேஜங், பஞ்ச்தார் மற்றும் தன்குடா ஆகிய நான்கு மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. 

இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதில், 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் காணாமல் போன 28 பேரைத் தேடி வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சங்குவாசபாவில் 21 பேரும் பஞ்சதாரில் 4 பேரும், தப்லேஜங் மாவட்டத்தில் 3 பேரும் சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT