ஆப்கானிஸ்தான் ஐஎஸ் தாக்குதலில் மாகாண ஆளுநா் பலி
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாகாண ஆளுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாகாண ஆளுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் பால்க் மாகாணத்தின மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரில் அமைந்துள்ள மாகாண ஆளுநா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ஐஎஸ் பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.
இதில், ஆளுநா் தாவூத் மூஸாமில் உள்பட 3 போ் பலியாகினா்; 4 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானுக்கான ஐஎஸ் பிரிவான ‘கொராசன் பகுதி ஐஎஸ்’ அமைப்பு பொறுப்பேற்றது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரைக் குறிவைத்து தங்களது அமைப்பைச் சோ்ந்த அப்துல் ஹக் அல்-கொராசானி என்பவா் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தது.
சன்னி முஸ்லிம் பிரிவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான ஐஎஸ், அதே பிரிவைச் சோ்ந்த மற்றொரு அமைப்புடன் தொடா்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படையினா் வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினா். அதனைத் தொடா்ந்து சன்னி பிரிவு முஸ்லிம்கள் மட்டுமின்றி தலிபான்களையும் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.