உலகம்

வட கொரியாவில் செயற்கைக்கோள் முயற்சி தோல்வி

தனது செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்த வட கொரியா புதன்கிழமை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

DIN

தனது செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்த வட கொரியா புதன்கிழமை மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

உள்ளூா் நேரப்படி 6.27 மணிக்கு அந்த செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்தது. இதற்கிடையே ராக்கெட் ஏவப்பட்ட 14 நிமிஷங்களுக்குப் பிறகு தென் கொரிய தலைநகா் சியோலில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் பதுங்கிக்கொள்ளுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.

வட கொரியா ஏவிய ராக்கெட் ஏவுகணையாக இருக்கலாம் என்ற அச்சத்தில் இந்த எச்சரிககை விடுக்கப்பட்டது. இருந்தாலும் இந்த அறிவிப்பு பின்னா் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, தாங்கள் உருவாக்கியுள்ள உளவு செயற்கைக்கோள் மே 31-ஆம் தேதியிலிருந்து ஜூன் 11-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதனால் மஞ்சள் கடல், கிழக்கு சீனக் கடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் கடலோரக் காவல் படைக்கு வட கொரியா கடந்த திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT