கோப்புப்படம் 
உலகம்

காஸாவில் போர் நிறுத்தம்: பிரான்ஸ் அதிபர் வரவேற்பு

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

DIN

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13,300-ஐ கடந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. 

பிணைக் கைதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக இன்று இரவு முதல் 4 நாள்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கவுள்ளதால், அதுவரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்தது.

இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

"பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர் நிறுத்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க அயராது உழைத்து வருகிறோம்.

அறிவிக்கப்பட்டுள்ள மனிதாபிமான போர்நிறுத்தம் மூலம் காஸாவில் உள்ள மக்களை மீட்கவும், உதவிகளை வழங்கவும் அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

SCROLL FOR NEXT