உலகம்

42 பாலஸ்தீனக் கைதிகளுக்கு ஈடாக 14 இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!

தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரண்டாம் கட்டமாக, 14 கைதிகளை ஹமாஸும் 42 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேலும் விடுவிக்கின்றன. 

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு தரப்புகளும் கைதிகளை பரஸ்பரம் விடுவித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த கட்டமாக 14 இஸ்ரேல் கைதிகளுக்கு ஈடாக 42 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்புகளுக்குமிடையே மத்தியஸ்தர்களாக செயல்படும் எகிப்தும் கத்தாரும், ஹமாஸ் கொடுத்த பிணைக்கதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இரண்டாம் நாளான சனிக்கிழமையில் இரண்டாம் கட்டப் பிணைக்கைதிகள் பறிமாற்றம் நடைபெறவிருக்கிறது.

கடந்த அக்.7ம் தேதியன்று ஹமாசால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் இந்தப்போர் துவங்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு மேலாக இஸ்ரேலால் நடத்தப்பட்ட இரக்கமற்றத் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இரண்டு நாள்கள் ஆகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 240 பிணைக்கைதிகளில் 24 பேரை விடுதலை செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக இஸ்ரேல் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT