முகப்பு
உலகம்

கராச்சியில் 6ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய தாய் கைது

கராச்சியில் 6ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
பகிர்:

கராச்சியில் 6ஆவது மாடியில் இருந்து பிறந்த குழந்தையை வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தான், கராச்சியின் லியாகதாபாத் பகுதியில் உள்ள கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை தாய் ஒருவர் வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த குழந்தை இறந்தது.

இதுதொடர்பாக குழந்தையின் தாய் மாமா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றவர். பெண்ணின் மன உறுதிப்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே அந்த பெண் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்மந்தப்பட்ட பெண் போதைக்கு அடிமையானவர் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →