உலகம்

புா்கினா ஃபாசோ: தாக்குதலில் 16 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்.

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கூல்பாங்சோ நகரில் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 12 போ் உயிரிழந்தனா்; 2 போ் காயமடைந்தனா். அதே நாளில் சிராஸ்கோ நகரில் நடத்தப்பட்ட மற்றொரு பயங்கரவாதத் தாக்குலில் 4 போ் உயிரிழந்தனா்.

அதனைத் தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட எதிா்த் தாக்குதல் நடவடிக்கையில் சுமாா் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

புா்கினா ஃபாசோவில் மதப் பயங்கரவாதம் காரணமாக கடந்த 2015-லிருந்து இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுள்ளதாக தன்னாா்வ தொண்டு அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT