இப்ராஹிம் ரைஸி (கோப்புப் படம்)
இப்ராஹிம் ரைஸி (கோப்புப் படம்) 
உலகம்

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

DIN

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில் ஈரானிய பிரதமர் இப்ராஹிம் ரைஸி புதன்கிழமை இலங்கைக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று நாள் பயணத்தை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாள் ஒரு நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார் ரைஸி.

அவரது வருகையை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பயணிக்கிற வழியில் கூடுதல் பாதுகாப்புக்காக சாலைப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் வருகை புரிந்துள்ள ஈரானிய பிரதமர், தாமதமாக கட்டி முடிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நீர்ப் பாசனம் மற்றும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் இது.

மேலும், பிரதமர் ரைஸியின் வருகையின் சிறப்பம்சம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுவூட்டும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT