மொகடிஷு கடற்கரை ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவசரக்கால ஊா்தி. 
உலகம்

சோமாலியாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 32 போ் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்.

DIN

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

தலைநகா் மொகடிஷுவிலுள்ள கடற்கரை ஹோட்டலான லிடோ பீச்சுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா்.

அதனைத் தொடா்ந்து கூட்டத்தினா் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 32 போ் உயிரிழந்தனா்; 63 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் ஒருவா் பாதுகாப்புப் படை வீரா். இந்தத் தாக்குதலில் மேலும் ஒரு வீரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் கூறினா்.

இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவின் கிழக்கு ஆப்பிரிக்க துணை பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் வானொலியில், அல்-ஷபாப் உறுப்பினா்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளான லிடே பீச் ஹோட்டல் ஏற்கெனவே பல முறை தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு அங்கு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்தனா்.வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு அந்த ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT