கோப்புப் படம் 
உலகம்

துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி!

துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் பலி.

DIN

துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை இன்று (ஆக. 12) அறிவித்தது.

ஆபரேஷன் கிளா-லாக் என்னும், வடக்கு இராக் எல்லை மீதான நேர வரம்பற்ற துருக்கி படையினரின் ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1980-களில் இருந்து துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த அமைப்புக்கு சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி கூறி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடக்கு இராக்கின் குர்திஸ்தான் மக்கள் கட்சியினரின் மறைவிடங்கள், தளங்கள் மீது துருக்கி படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் இறந்ததாக இராக் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் கிளா-லாக்கை 2022 ஏப்ரல் மாதத்தில் துருக்கி படையினர் தொடங்கினர். அதுமுதல் மெடினா, ஸாப், அவாசின் - பாஸ்யன் ஆகிய துருக்கி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ ஆளுநர் சந்திப்பு!

மீண்டும் மழை! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

நாளை சிம்பு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: சி.வி. சண்முகம் பேச்சு

வந்தே பாரத் ரயில் கட்டணம்! சீனா, ஜப்பான், பிரேசிலை விடக் குறைவு: அஸ்வினி வைஷ்ணவ்

சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் வீரரின் பந்துவீச்சு ஸ்டைல்.. ஆதரவு குரல் கொடுத்த அஸ்வின்!

SCROLL FOR NEXT