உலகம்

900 ஆண்டுகள் பழமையான கோட்டை விற்பனைக்கு! விலை ரூ.100 கோடி!

DIN

லண்டனில் 900 ஆண்டுகள் பழமையான கோட்டையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப விலையாக ரூ.100 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் கம்பிரியா நகரில் 900 ஆண்டுகள் பழமையான கோட்டை அமைந்துள்ளது. இந்தக் கோட்டையை கடந்த 1997ஆம் ஆண்டு சாலி நைட்டிங்கேள் என்பவர் வாங்கியுள்ளார். 

சராசரியாக 29000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கோட்டையில், உரிமையாளர் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 7,750 சதுர அடியை மட்டுமே பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

கோட்டையின் எஞ்சிய பகுதிகளை 2013ஆம் ஆண்டுமுதல் உணவகமாகவும், விடுதியாகவும் மாற்றி பராமரித்து வருகிறார். 20 படுக்கை அறைகள் கொண்ட இந்த கோட்டையை தற்போது விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்ப விலையாக ரூ.100 கோடி நிர்ணயித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

பாரம்பரியமிக்க இந்தக் கோட்டை பல தொழிலதிபர்களின் விருப்ப இடமாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

மக்களவைத் தோ்தலுக்கான கேஜரிவாலின் உத்தரவாதங்களை அறிவித்தாா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

நான்குனேரி அருகே மிரட்டல் விடுத்தவா் கைது

கருங்கல் பகுதியில் மிதமான மழை

திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT