இம்ரான் கான் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. அதனுடன் சோ்த்து பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது.
பிப். 8-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில், அதிகபட்சமாக முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 93 இடங்களைக் கைப்பற்றினா்.
நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 75 இடங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களில் வெற்றி பெற்று 3-ஆம் இடம்பிடித்தது.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முடிவை தற்போது சிறையிலுள்ள இம்ரான் கான் நிராகரித்துவிட்டார். இந்த சூழலில், பாகிஸ்தானில் ’பிபிபி’ மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ’பிஎம்எல்-என் கட்சி’ புதிய அரசை அமைக்கவிருக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் மோசமான செயல்பாடு காரணமாக, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவர் பொறுப்பிலிருந்து, பாரிஸ்டர் கோஹர் அலி கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்கட்சித் தேர்தல் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும், கட்சியின் புதிய தலைவராக 71 வயதான பாரிஸ்டர் அலி ஸாபர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.