ராபாவில் பலியானவர்கள் உடல்களைச் சுற்றி பாலஸ்தீனர்கள் | AP 
உலகம்

நள்ளிரவு தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் பலி

13 வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை  22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

DIN

காஸாவின் எல்லை பகுதியான ராஃபாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குறைந்தது 6 பேராவது பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் ராஃபா எல்லையில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில் அந்தப் பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான பெண்ணின் சகோதரி சோஹாத் அல்-தர்பாஷி, “இங்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத அப்பாவி பொதுமக்கள்தாம் இந்தத் தாக்குதலில் பலியானவர்கள். இங்கு ராணுவம் யாரைக் குறிவைத்ததோ அவர் காஸாவின் குடிமைப்பணி ஊழியர், போராளி அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய காத்திருப்பு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட போர்ப் பயிற்சி | AP

13 வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை  22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவின் மொத்த மக்கள்தொகையில் 85 சதவிகிதம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT