மேற்கு கடற்கரைப் பகுதியின் ரமல்லாவை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இப்போது அங்கு வருவதற்கும் வித்தியாமில்லை என ஹமாஸ் அதிகாரி சமி அபு சுஹாரி தெரிவித்துள்ளார்.
'ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாப்பதுதான் அவரது வருகையின் நோக்கம். அமெரிக்கர்களுக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசமில்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 'பிளிக்கனின் நிலைப்பாடு, காஸாவில் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் செய்த பெரும் வன்முறைக் குற்றங்களில் அமெரிக்காவிற்கும் பங்குள்ளதைக் காட்டுகிறது' என ஹமாஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
'பாலஸ்தீன எதிர்ப்பு மக்களிடம் பரவலாகியுள்ளது எனக் கூறுவது இஸ்ரேல் ராணுவ வீரர்களின் இனப்படுகொலைக் குற்றங்களை நியாயப்படுத்தும் பிளிங்கனின் மோசமான முயற்சிகளாகும்' என ஹமாஸ் கூறுகிறது.
குற்றம் செய்தவர்களின் கையிலுள்ள ரத்தக்கரைகளை நீக்க பிளிங்கன் முயற்சிக்கிறார் என அந்த அறிக்கையில் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.