முகப்பு
உலகம்

யேமன் தலைநகரில் அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்

யேமனில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நடத்திவரும் தாக்குதல் 2-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

Updated On : 13 ஜனவரி, 2024 at 8:50 AM
இஸ்ரேலிய கொடியைக் கொளுத்தும் ஈரான் போராட்டக்காரர்கள் | AP
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:50 PM

யேமன் தலைநகர் சனாவில் இரண்டாவது நாளாகப் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரைட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தைப் பாதிக்கும்வகையில் ஹெளதி அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கான பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன், யேமன் மீது தொடர்தாக்குதல் நடத்திவருகிறது.

ஹெளதி செய்தித் தொடர்பாளர், கடந்த 48 மணி நேரத்தில் 73 குண்டுவீச்சுகள் நிகழ்ந்ததாகவும் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயமுற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என ஹெளதிகள் அறிவித்தனர்.

2014-ஆம் ஆண்டு அமைந்த, பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசை எதிர்த்து உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் அமைப்பான ஹெளதி அமைப்பு, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தரை மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தக் கோரி கப்பல்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.