கோப்புப்படம் 
உலகம்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா மீண்டும் எறிகணைகள் வீச்சு

வடகொரியா கடல்வழி எறிகணைகள் சோதனைகளை இம்மாதம் மூன்றாவது முறையாக நிகழ்த்தியிருப்பதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

DIN

சியோல் :  கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அதற்கு பதிலடியாக வடகொரியா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில், தொடர்ந்து எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை நிகழ்த்தியிருப்பதாக தென் கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியது.

அந்த வகையில், வடகொரியா இந்த ஆண்டு நடத்தியுள்ள மூன்றாவது கட்ட எறிகணை சோதனை முயற்சி இதுவாகும். முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்த எறிகணையின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகளை தென்கொரிய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT