முகப்பு
உலகம்

வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் நேபாளம்! ஒரே மாதத்தில் 50 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் இயல்பைவிட அதிகரித்த பருவமழை: 36 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழப்பு!

Updated On : 7 ஜூலை, 2024 at 4:10 PM
- படம் | ஏபி
பகிர்:

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நேபாளத்தில் முக்கிய நீராதாரமான கோஷி மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

காத்மாண்டு, பக்தபூர், லைத்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஆங்காங்கே ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அங்கு மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஞாயிற்றுக்கிழமை பகல் வரையிலான கடந்த 36 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் வெள்ளத்தில் மாயமானதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஜூன் பிற்பகுதியிலிருந்து பருவமழை தொடங்கியதிலிருந்து, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- படம் | ஏபி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.