கோப்புப் படம் 
உலகம்

உயிரணு வழங்கியதாக கூறுவது பொய்: மறுப்பு தெரிவித்த எலான்!

அமெரிக்க செய்தி நிறுவனத்தின் செய்திக்கு மறுப்பு தெரிவித்து எலான் எக்ஸ் பதிவு

DIN

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக எலான் மஸ்க் உயிரணுவை தானமாக அளித்தார் என்ற செய்திக்கு எலான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது சொந்த உயிரணுவை ஆராய்ச்சிக்காக தானமாக அளித்துள்ளார் என்று செய்தி வெளியிட்டது. அதாவது ``செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழும் சூழலை ஆராய ஸ்பேஸ்எக்ஸில் பணிபுரிபவர்களுக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தவையும் அடங்கும். இந்த ஆராய்ச்சிக்காக மஸ்க், தனது சொந்த உயிரணுவை வழங்கியுள்ளார்” என்று கூறியது.

ஆனால், எலான் மஸ்க் அந்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றும், அவர் அவ்வாறு உயிரணுக்களை தானமாக அளிக்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆராய்ச்சியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

ஜாதிப் பெயா்களுக்கு மாற்றுப் பெயா்கள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா் பொ. ரத்தினசாமி

தனிமனித ஒழுக்கம் மேம்பட புத்தகங்களை வாசிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தில் 3.20 லட்சம் உறுப்பினா்கள் பயன்!

பச்சமலையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT