முகப்பு
உலகம்

கூகுள், ஆப்பிளுக்கு அபராதம் விதித்த தென்கொரிய அரசு.. என்ன காரணம்?

விதிகளை மீறியதற்காக கூகுள், ஆப்பிளுக்கு தென்கொரிய அரசு அபராதம்

Updated On : 12 ஜூன், 2024 at 6:14 PM
கோப்புப் படம்
பகிர்:

கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் தென்கொரிய பிரிவுக்கு இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பான சட்ட விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது தென்கொரிய அரசு.

கூகுளின் கொரிய பிரிவுக்கு 3 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.1,83,000) அபராதமாகவும் ஆப்பிளுக்கு 210 மில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.12,81,371) அபராதமாக விதித்துள்ளது கொரிய தொலைத்தொடர்பு ஆணையம்.

இருப்பிட தரவு சேகரிப்பு தொடர்பான விதிகளை மீறிய கூகுள், ஆப்பிள் உள்பட 188 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2022-ல் திருத்தப்பட்ட இருப்பிட தகவல் பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கமான சோதனையின்போது இந்த நிறுவனங்களின் மீறல் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் கிம் ஹோங்-ல், தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சமூக பாதுகாப்பு மீது அக்கறை கொண்டிருப்பது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.