கடந்த 24 மணி நேரத்தில் 69 பேர் பலி! காஸாவில் தொடரும் துயர்!!
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு, மக்கள் நிலை அவலம்
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69 பாலஸ்தீனர்கள் பலியாகினர். 110 பேர் காயமுற்றனர்.
ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 31,341 ஆகவும் காயமுற்றவர்கள் எண்ணிக்கை 73,134 ஆகவும் உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கடும் குண்டுவீச்சு மற்றும் போதுமான மீட்பு மற்றும் மருத்துவ சிகிச்சை இல்லாததால் கட்டட இடிபாடுகள் நடுவே சிக்கிக் கொண்டிருப்பவர்கள் நிலை மோசமாக உள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தெற்கு நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ள நிலையில் அங்கு தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான மக்களை மீண்டும் இடம்பெயர இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.