பாரிஸ் ஒலிம்பிக் வளையம் (கோப்புப் படம்) AP
உலகம்

ஒலிம்பிக் அணிவகுப்பில் ரஷியா, பெலாரஸ் நாடுகளுக்கு அனுமதி மறுப்பு!

ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு ஒலிம்பிக் அணிவகுப்பு மறுப்பு!

இணையதளச் செய்திப் பிரிவு

பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இரு நாடுகளில் இருந்தும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வான வீரர்கள், நாட்டின் கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் சுயேட்சையான வீரர்களாக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

2022-ல் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் பின்விளைவாக இந்த முடிவை ஒலிம்பிக்ஸ் கமிட்டி எடுத்துள்ளது.

வழக்கமாக அரங்கில் நடைபெறும் அணிவகுப்பு, இந்த முறை சென் ரிவர் பகுதியில் ஒலிம்பிக் அணிகள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடுகள் சாராத தனி போட்டியாளர்களாக ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர்களுக்கு தனியாக உருவாக்கப்பட்ட கொடியும் கீதமும் இசைக்கப்படும். அணிவகுப்பு தவிர்த்து மற்ற தொடக்க நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்பார்கள் என கமிட்டி தெரிவித்துள்ளது.

ரஷியாவின் ஒலிம்பிக் பங்கேற்பை எதிர்த்து வரும் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ, கமிட்டியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாத காங்கிரஸ் இணைகிறதா? பாஜகவுடன் கூட்டணி தொடருமா? சரத் பவார் பேட்டி!

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!

லிபியா சர்வாதிகார அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை!

ஜொலிக்கும் தங்கம் விலை! இருளில் பொற்கொல்லர் வாழ்க்கை!!

SCROLL FOR NEXT