உலகம்

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

ஜேஜு தீவில் வானிலை குறுக்கீடு: 40 விமானங்கள் பாதிப்பு

DIN

தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜேஜு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 20 விமானங்களும் வருகை தரும் 20 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீவுக்குப் பலத்த காற்று வீசும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தை முன்னதாகவே தொடர்புகொண்டு தகவல் பெறுமாறு கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரியாவில் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி மழை பெய்து வருவதாகவும் பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் உடன் சில இடங்களில் மழை பெய்து வருவதாகவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்கிமில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்

கோகோ-கோலா இந்தியா லாபம் 73% சரிவு!

மொந்தா புயல் ஆந்திரத்தை நோக்கிச் செல்லும்! மழை பெறுமா சென்னை?

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: 3 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி

SCROLL FOR NEXT