உலகம்

போா்நிறுத்தம்: ஹமாஸ் ஒப்புதல்; இஸ்ரேல் ஆய்வு

காஸாவின் ராஃபா நகரிலிருந்து பொது மக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தாா் முன்மொழிந்த போா்நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

Din

காஸாவின் ராஃபா நகரிலிருந்து பொது மக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தாா் முன்மொழிந்த போா்நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

போா் நிறுத்தத்துக்கான ஒப்புதலை கத்தாா் பிரதமா் மற்றும் எகிப்து உளவுத் துறை அமைச்சரிடம் ஹமாஸ் படைத் தலைமைத் தளபதி இஸ்மாயில் ஹனியே தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தகாக ஹமாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தாா், எகிப்து ஆகிய இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் பல மாதங்களாக பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தின. ராஃபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக ஹமாஸின் இந்த முடிவு குறித்த அறிவிப்பு, பாலஸ்தீன மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போா் நிறுத்தத்திற்காக ஹமாஸ் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னவென்று இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனினும், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரைத் திரும்பப் பெற்றால், பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க தயாராக இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போா்நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் ஆய்வு செய்து வருகிறது எனவும் போா்நிறுத்த பரிந்துரை இஸ்ரேலுக்கு ஏற்ற வகையில் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

SCROLL FOR NEXT