மாதிரி படம் ஐஏஎன்எஸ்
உலகம்

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

கனடாவில் கும்பல் சண்டையில் மூவர் பலி

DIN

கனடா மான்ட்ரியல் நகரில் நடந்த கும்பல் சண்டையில் பதின்பருவ சிறுவன உள்பட மூவர் உயிரழந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மான்ட்ரியல் காவல்துறைக்கு அவசர அழைப்புகள் வந்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்தது.

குறைந்தது 15 பேர் கட்டடங்களுக்கு இடையில் உள்ள வீதியில் சண்டை போட்டுள்ளனர். காவலர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த குற்றம் அல்லது ரெளடி கும்பல் தொடர்புடைய சண்டை இது கிடையாது என காவலர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சண்டையில் 15 வயது சிறுவன் உள்பட மூவர் பலியாகியுள்ளனர். அவர்கள் இந்த சண்டையில் பங்கேற்றவர்கள்தாம் என தெரிவிக்கப்படுகிறது.

மான்ட்ரியலில் கடந்த பத்து நாள்களில் இது 7 வது கொலைச் சம்பவம். 14, 15, 16 -ஆக பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சிடிவி செய்திகள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT