முகப்பு
உலகம்

ரஷியாவில் தாக்குதல்: நேட்டோ தலைவா் கருத்தால் சா்ச்சை

Updated On : 28 மே, 2024 at 8:25 PM
பகிர்:

பிரஸ்ஸெல்ஸ்: தாங்கள் வழங்கும் ஆயுதங்கள் மூலம் ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளை அளித்துவருகின்றன.

எனினும், தங்களது ஆயுதங்களைக் கொண்டு ரஷிய எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அந்த நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இந்த நிலையில், நேட்டோ தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் அண்மையில் அளித்த பேட்டியொன்றில், ‘உக்ரைனின் தற்காப்பு உரிமையை நிலைநாட்டுவதற்காக நேட்டோ ஆயுதங்களைக் கொண்டு ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அந்த நாட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நேட்டோ உறுப்பு நாடான இத்தாலியின் துணைப் பிரதமா் மேட்டியோ சால்வினி கூறுகையில், ‘ஸ்டால்டன்பா்க் கூறுவதை அமல்படுத்தினால் அது 3-ஆம் உலகப் போருக்கு வித்திடும்’ என்று எச்சரித்தாா்.