பெல்ஜியம் பிரதமர் உடன் உக்ரைன் அதிபர் ஐஏஎன்எஸ்
உலகம்

உக்ரைனின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பெல்ஜியம்: ஸெலென்ஸ்கி ஒப்பந்தம்!

பெல்ஜியம்- உக்ரைன் புதிய ஒப்பந்தம்

DIN

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, பெல்ஜியம் பிரதம அமைச்சர் அலெக்ஸாண்டர் டி க்ரூ இருவரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை, ஸெலென்ஸ்கி இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையை ஸ்பெயின் நாட்டுடன் மேற்கொண்டார். அந்த உடன்படிக்கை மூலம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுத உதவியை உக்ரைன் பெறவுள்ளது.

பெல்ஜியம் சார்பில் அளிக்கப்படும் எஃப்-16 வகை போர் விமானங்களை அளிப்பதற்கான நெறிகாட்டுதல்களை வழங்க மெல்ஸ்ப்ரோக் ராணுவ விமான நிலையத்துக்கு உக்ரைன் அதிபர் செல்லவுள்ளார்.

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதாக ஒப்புக்கொண்ட நாடுகளில் பெல்ஜியமும் ஒன்று.

2022 பிப்ரவரி முதல் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைன், நேட்டோ நாடுகளுடன் தனித்தனியாக பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஜுலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மேற்கொண்டுவருகிறது.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உடன் உக்ரைன் ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

அமெரிக்காவுடனான உக்ரைன் பாதுகாப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT