சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவை சோ்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
நட்ஜமெனா (சாட்): மத்திய ஆப்பிரிக்காவை சோ்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
லேக் சாட் பிராந்தியத்தில் ராணுவ வீரா்கள் மீது போகோ ஹராம் பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் ராணுவ வீரா்கள் 17 போ் கொல்லப்பட்டனா். இதற்குப் பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 போ் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லேக் சாட் பிராந்தியத்தில் 2020-இல் ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோ ஹராம் பயங்கரவாத இயக்கத்தின் நிலைகள் அழிக்கப்பட்டன. இந்நிலையில், அண்மைக் காலமாக போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். நைஜீரியாவின் தோன்றிய போகோ ஹராம் அமைப்பானது இஸ்லாமிய சட்டத்தை நிறுவும் நோக்குடன், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தாக்குதல்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் அண்டை நாடுகளான கேமரூன், நைஜா், சாட் போன்றவற்றுக்கும் விரிவடைந்தன.
சாட் நாட்டில் 1.8 கோடி மக்கள் வசித்து வருகின்றனா்.