FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவை: தொடரும் தற்காலிகத் தடை!

போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 அக்டோபர் 2024, 10:19 pm IST
குண்டுவெடிப்பில் சூழ்ந்த கரும்புகை - AP
பகிர்:

லெபனான், ஏமன் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டிற்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் உள்ள பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலில் போர் பதற்றம் நீடித்துவருவதால், விமான சேவையை சில நாடுகள் நிறுத்திவைத்திருந்தன.

Advertisement

Advertisement

ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், ஸ்விட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இதோடு மட்டுமின்றி போலந்து, ஹங்கேரி, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments