மாதிரிப் படம் 
உலகம்

2050-ல் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 20% அதிகரிக்கும்! எங்கு?

மூத்த குடிமக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்கள் தினம்.

DIN

மங்கோலியாவில் உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டு 20% அதிகரிக்கும் என அந்நாட்டு தேசிய பிள்ளியியல் அலுவலக விவரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச மூத்த குடிமக்கள் தினம் இன்று (அக். 1) கடைபிடிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் 1990ஆம் ஆண்டுமுதல் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் மூத்த குடிமக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி மங்கோலியா தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்கோலியா நாட்டு மூத்த குடிமக்கள் எண்ணிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மங்கோலியாவில் தற்போது உள்ள மக்கள்தொகையில் 35 லட்சம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 9.8% ஆகும்.

தற்போது உள்ள மூத்த குடிமக்களில் 40.3% ஆண்கள். எஞ்சிய 59.7% பெண்களாக உள்ளனர். மங்கோலியாவில் மிகவும் மூத்தவராக 107 வயது முதியவர் அறியப்படுகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT