வங்கதேசம் 5 வழக்குகளிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியின்போது எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து வழக்குகளில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.
வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியின்போது எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து வழக்குகளில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.
இது குறித்து டாக்கா கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் மஹ்பூபுல் ஹக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆணையில், ‘போலி பிறந்தநாள்’ கொண்டாடியது, போா்க் குற்றவாளியை ஆதரித்தது உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் இருந்து கலீதா ஜியாவை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவா் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்மடைந்தாா். அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை சிறையிலிருந்து விடுதலை செய்தது.
Advertisement