தீ விபத்து 
உலகம்

கென்யா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி!

தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

PTI

கென்யாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கென்யா உறைவிடப் பள்ளிகளில் தீ விபத்து அடிக்கடி நிகழ்கின்றது. மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாக இந்த தீ விபத்து ஏற்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT