நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!
நியூஸிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹாக்ஸ் விரிகுடாவில் 6 ஆயிரம் பேர் உணர்ந்ததாக தகவல்..
நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது. ஹேஸ்டிங்ஸ் நகருக்கு தெற்கு 20 கிமீ தொலைவில் ஹாக்ஸ் விரிகுடா பகுதியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை சுமார் 6 ஆயிரம் பேர் உணர்ந்ததாக தெரிவிக்கின்றது.
ஹாக்ஸ் விரிகுடா நியூசிலாந்தின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். முன்னதாக 1931இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 256 பேர் கொல்லப்பட்டனர்.
50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்து, "நெருப்பு வளையம்" பகுதியில் அமைந்துள்ளது, இது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் வளைவாகும்.
A magnitude 4.9 earthquake struck New Zealand's lower North Island Wednesday, with a jolt rated as moderate by the country's geological sciences agency.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.