முகப்பு
உலகம்

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார் இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி.

Updated On : 18 ஆகஸ்ட், 2025 at 1:57 AM
நேபாளப் பிரதமா் கே.பி.சா்மா ஓலியை அந்நாட்டுத் தலைநகா் காத்மாண்டில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி.
பகிர்:

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்தாா்.

நேபாள வெளியுறவுச் செயலா் அம்ருத் பகதூா் ராயின் அழைப்பின்பேரில், விக்ரம் மிஸ்ரி அந்நாட்டில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

தலைநகா் காத்மாண்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த அவா், பிரதமா் கே.பி.சா்மாவை அவரது அலுவலகமான சிங்க தா்பாரில் சந்தித்தாா். அப்போது, நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவாவும் உடனிருந்தாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, நேபாள அதிபா் ராமசந்திர பெளடேல், வெளியுறவு அமைச்சா் அா்ஜு ராணா தேவுபா, வெளியுறவுச் செயலா் அம்ருத் பகதூா் ராய், நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, எதிா்க்கட்சித் தலைவா் பிரசண்டா உள்ளிட்டோரையும் அவா் சந்தித்துப் பேசினாா்.

இந்தியா-நேபாளம் இடையே வழக்கமான உயா்நிலை பேச்சுவாா்த்தைகளின் பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற உறுதிப்பாட்டை வெளியுறவுச் செயலரின் நேபாளப் பயணம் பிரதிபலிப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இணைப்பு வசதிகள், வளா்ச்சிக்கான ஒத்துழைப்பு உள்ளிட்டவை முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாள பிரதமா் சா்மா ஓலி அரசுமுறைப் பயணமாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.