அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!
மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்குச் செல்வது குறித்து...
மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இதையடுத்து, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்த அவர் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வரும் மே மாதம் இந்தியாவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கான முன்னேற்பாடாகக் கருதப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி அமெரிக்காவில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வதாக, சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் மிஸ்ரி அந்நாட்டின் வெளியுறவு பொதுச்செயலாளர் மார்ட்டின் பிரியன்ஸுடன் இணைந்து இந்தியா - பிரான்ஸ் வெளியுறவு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பின்னர், ஜெர்மனியின் பெர்லின் நகரத்துக்குச் செல்லும் மிஸ்ரி இந்தியா - ஜெர்மனி இடையிலான வெளியுறவு கூட்டத்துக்கும் தலைமை வகிக்கின்றார்.
இந்தக் கூட்டங்களில், இந்தியாவுக்கும் அந்நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, அணுசக்தி, செய்யறிவு (ஏஐ), மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளின் உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Foreign Secretary Vikram Misri is visiting France and Germany on an official tour.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.