டிட்வா புயலால் இலங்கையில் பாதிப்பு! AP
உலகம்

டிட்வா புயலால் இலங்கையில் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!

டிட்வா புயலால் இலங்கையில் 14 லட்சம் பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கொழும்பு: டிட்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 14 லட்சம் பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பல டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்து இலங்கையில் சிக்கித் தவித்துவந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை மீட்டுள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த் நிலையில், டிட்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இலங்கையில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை(டிச. 2) நிலவரப்படி 390-ஆகவும், மாயமானோரின் எண்ணிக்கை 352-ஆகவும் உள்ளது.

300,000 children feared affected by Cyclone Ditwah in Sri Lanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பும் கறுப்பும்!

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க விரும்பும் திலக் வர்மா!

இலங்கையில் பாகிஸ்தானின் மீட்புப்பணிகளை முடக்க இந்தியா முயற்சி? -பாக். குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

SCROLL FOR NEXT