உலகம்

குடியேற்றத் தடை: 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தும் டிரம்ப்

அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படும் தடையை 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படும் தடையை 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், மியான்மா், சாட், காங்கோ, ஈக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் உள்ளிட்ட 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களின் பரிசீலனையை முடக்கிவைத்துள்ள அவா், இந்தத் தடையை 30 நாடுகளுக்கு விரிவுபடுத்த அமெரிக்க குடியேற்ற சேவைத் துறைக்கு (யுஎஸ்சிஐஎஸ்) பரிந்துரைக்கவிருப்பதாக தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் தெரிவித்துள்ளாா்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே இரு தேசிய காவல்படையினா் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறியவா் கடந்த வாரம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு தீவிரப்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT