தென்னாப்பிரிக்காவில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்ததில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் பலியாகினர்.
தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் கட்டுமானப் பணியின்போது வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் ஒருவர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டது.
பலியானவர்களில் ஒருவர் விக்கி ஜெய்ராஜ் பாண்டே (52) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாண்டே கோயிலின் நிர்வாக உறுப்பினராகவும் கட்டுமானத் திட்டத்தின் மேலாளராகவும் இருந்தார். இதனிடையே சனிக்கிழமை குவாசுலு-நடால் மாகாண அமைச்சர் துளசிஸ்வே புதெலெசி சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
அப்போது மீட்புப் பணிகள் தேவைப்படும் வரை தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.