வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா. (கோப்புப் படம்)
உலகம்

கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! தாயாருக்காக மன்னிப்பு கோரிய மகன்!

வங்கதேச முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவி வகித்த கலீதா ஜியா நீண்ட நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இன்று மதியம் நடைபெற்ற முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் வங்கதேசத்தின் இடைக்கால ஆலோசகர் முஹமது யூனுஸ் உள்பட மூத்த தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, டாக்காவில் உள்ள கொல்லப்பட்ட முன்னாள் அதிபரும் அவரது கணவருமான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்தில் அவரது கல்லறைக்கு அருகில் கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கலீதா ஜியாவின் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அவரது மகன் தாரிக் ரஹ்மான் பேசியதாவது:

“யாரேனும் அவரது (கலீதா ஜியா) வார்த்தைகளால் மற்றும் செயல்களால் காயமடைந்திருந்தால் அவரின் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கலீதா ஜியா யாரிடமாவது கடன் பெற்றிருந்தால் அவர்கள் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும், அவர்களது கடன் பாக்கிகள் அனைத்தும் திருப்பித் தரப்படும் எனவும் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டீக்கடையில் வட மாநில இளைஞர்களைக் கத்தியால் குத்திய இருவர்! காவல்துறையினர் விசாரணை!

குறி வைத்தால் தவறாது... அஜித்தின் துப்பாக்கி சுடுதல் விடியோ!

ஏற்ற-இறக்கத்தில் வர்த்தகமான ஸ்விக்கி, எடர்னல் பங்குகள்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு!

கைவிடப்பட்ட ரயில் நிலையத்தில் நியூயார்க் மேயராக ஸோரான் மம்தானி நாளை பதவியேற்பு!

SCROLL FOR NEXT