FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

கௌதமாலா நாட்டில் சாலை விபத்தில் 51 போ் பலியாகியதைப் பற்றி...

Updated On : 11 பிப்ரவரி 2025, 2:40 am IST
கௌதமாலா நாட்டில் சாலை விபத்தில் 51 போ் பலியாகியுள்ளனர்.
பகிர்:

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா்.

தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த அங்கிருந்த ஏராளமான வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று தொடா்ச்சியாக மோதின. இந்த விபத்தில் பேருந்து மட்டும் பாலத்தில் இருந்து 115 அடி (35 மீட்டா்) ஆழத்தில் இருந்த கழிவுநீா் ஓடையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது.

இதில் பலியான 51 பேரில் குழந்தைகளும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபா் பொ்ணாா்டோ அரேவலோ, இதற்காக அந்நாட்டில் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments