உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி - ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 
உலகம்

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

ரஷியா - உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகின்றது. இந்தப் போரில், இருதரப்பும் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்களைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் முக்கிய அதிகாரிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று இன்று (ஜூலை 23) மாலை துவங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு, மாஸ்கோவில் இருந்து வருகைத் தரும் குழுவுக்கு, ரஷிய அதிபரின் உதவியாளர் விளாதிமீர் மெடின்ஸ்கி தலைமைத் தாங்குகிறார். இதேபோல், உக்ரைன் நாட்டு குழுவுக்கு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமைத் தாங்குகிறார்.

கடந்த மே 16 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில், இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இருதரப்பும் தாங்கள் சிறைப்பிடித்த பிணைக் கைதிகளை விடுவித்தனர்.

முன்னதாக, உடனடியாக இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென, போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த போப் பதினான்காம் லியோ, ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் வாடிகன் நகரத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

A third round of peace talks between Russian and Ukrainian officials are reportedly taking place in Turkey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தைவிட்டு வெளியேறும் சர்மா ஓலி! ராணுவ ஆட்சி?

தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 24 மாவட்டங்களில் மழை!

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

SCROLL FOR NEXT