இம்ரான் கான் கோப்புப் படம்
உலகம்

இம்ரான் கானின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

இம்ரான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஆக.12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் மே 9ல் நடைபெற்ற வன்முறை வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த மாதம் லாகூர் உயர்நீதிமன்றம் இம்ரான் கானின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.

தலைமை நீதிபதி யஹ்யா அப்ரிதி மற்றும் நீதிபதி முகமது ஷாஃபி சித்திக் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பாதுகாப்பு ஆலோசகரின் வேண்டுகோளுக்கிணங்க விசாரணையை ஒத்திவைத்தது.

இம்ரான் கான் சார்பாக வழக்குரைஞர் சல்மான் அக்ரம் ராஜா ஆஜரானார். தலைமை வழக்குரைஞர் சல்மான் சஃப்தர் வெளிநாட்டில் இருப்பதாகவும், எனவே அவர் ஒத்திவைக்கக் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பவும், இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிடவும் அக்ரம் ராஜா கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை

உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை நடவடிக்கைகளை ஒத்திவைத்தது.

ஏப்ரல் 2022ல் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 72 வயதான இம்ரான் கான், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் ஆகஸ்ட் 2023 முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார். அவர் பல சட்ட வழக்குகளை எதிர்கொள்கிறார், அவற்றில் பெரும்பாலானவை அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகுத் தாக்கல் செய்யப்பட்டன.

Pakistan's Supreme Court on Tuesday adjourned until August 12 the hearing of bail appeals filed by former prime minister Imran Khan in connection with the May 9 violence cases.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

ஆக. 2 முதல் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள்! என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

பதிவுத் தபால் சேவை நிறுத்தம்: சு.வெங்கடேசன் கண்டனம்

இந்தியா - இங்கிலாந்து மோதலால் ஆஷஸ் தொடரில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை!

SCROLL FOR NEXT