முகப்பு
உலகம்

உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களில் 3 வீரர்கள் பலியாகியுள்ளதைப் பற்றி...

Updated On : 30 ஜூலை, 2025 at 10:20 AM
(கோப்புப் படம்)
பகிர்:

உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் அமைந்திருந்த ராணுவப் பயிற்சி மையத்தின் திடலின் மீது ரஷியா நேற்று (ஜூலை 29), ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இதில், உக்ரைனின் 3 ராணுவ வீரர்கள் பலியானதுடன், 18 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், செர்னிஹிவ் மாகாணத்தின், ஹொன்சாரிவ்ஸ்கே பகுதியில் அமைந்திருந்த உக்ரைனின் 169-வது ராணுவப் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், இஸ்காந்தர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால், சுமார் 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கவோ அல்லது படுகாயமடைந்திருக்கவோ வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷியா மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளின் மீது தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், 78 ராணுவ ட்ரோன்கள், 8 அதி நவீன போர் விமானங்கள் ஆகியவை மூலம் உக்ரைன் நகரங்களின் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, உக்ரைனின் விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: கூகுளின் ஏஐ சம்மரி: இணையதளங்களுக்கு சவால்! இனி என்னவாகும்?

summary

Three Ukrainian soldiers have been killed in a Russian missile attack on a military training ground.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.