அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பது பற்றி...
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணைத் விழுந்ததில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், ராணுவ தளவாடங்கள், ராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகளைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இரு நாடுகளின் மோதலால் மேற்கத்திய நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஏவுகணை விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்ததாவது:
“ஈரானின் ஏவுகணை விழுந்ததில் தூதரகத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தூதரக நடவடிக்கைகளை இன்று ஒருநாள் நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றியும் நூறு மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளும் கட்டடங்களும் ஏவுகணைத் தாக்குதலில் கடுமையான சேதமடைந்த விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிக்க : இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.