முகப்பு
உலகம்

சா்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.

Updated On : 21 மார்ச் 2025, 12:36 am IST
பகிர்:

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

இந்த ராணுவ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், ராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யாமலேயே மேலும் பல அரசுப் பொறுப்புகளை வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அதிபரும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான பிரபாவோ சுபியாந்தோவுக்கு ஆதரவான கட்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன.

இருந்தாலும், இந்தோனேசியாவின் மிகப் பலவீனமான ஜனநாயகத்துக்கு இந்த சட்டத் திருத்தம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஜனநாயக ஆதரவாளா்களும் மனித உரிமை ஆா்வலா்களும் அச்சம் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments