அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்
எனது தலைமையிலான அரசு நிர்வாகம் செய்த மத்தியஸ்தப் பேச்சு இந்த சண்டை நிறுத்தம் ஏற்பட உதவிகரமாக இருந்தது - டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(மே 12) பேசுகையில், “கடந்த சனிக்கிழமை எனது அரசு நிர்வாகம் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்தது. அணு ஆயுதங்கள் பெருமளவில் வைத்துள்ள இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிரந்தர சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பும் எட்டப்படலாம்.
நாங்கள் நிறைய உதவியுள்ளோம். வர்த்தகத்திலும் உதவியிருக்கிறோம். நான் இரு நாடுகளுடனும் இதனை கூறினேன் ‘நாங்கள்(அமெரிக்கா) உங்களுடன்(பாகிஸ்தான், இந்தியா) ஏராளமான வர்த்தகத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். இந்தநிலையில், இதனை நிறுத்திக் கொள்வோம்.
Advertisement
Advertisement
சண்டையை நிறுத்தினால் அமெரிக்கா வர்த்தகம் செய்யும். சண்டையை நிறுத்தாவிட்டால், எந்தவொரு வர்த்தக நடவடிக்கைகளையும் அமெரிக்கா உங்களுடன் மேற்கொள்ளாது’” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வர்த்தகம் தொடர்பான பேச்சு நடைபெறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.