இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 17 வயது பாலஸ்தீன நபர் ஜனீல் ஹனானி உடல் AP Photo
உலகம்

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடவடிக்கை...

இணையதளச் செய்திப் பிரிவு

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பாலஸ்தீனர்களின் உடல்களை திங்கள்கிழமை(நவ. 3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பிணைக்கைதிகள் உடல்களும் கடந்த 2023-இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக். 10-இல் காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் அமல் ஆன பின், ஹமாஸிடமிருந்து 20 பிணைக்கைதிகள் உடல்கள் இஸ்ரேலிடம் ஒபடைக்கப்பட்டுள்ளன. 8 உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும்போதும் இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பாலஸ்தீனர்கள் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இதுவரை மொத்தம் 270 பாலஸ்தீனர்கள் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

Israel on Monday handed over the bodies of 45 Palestinians, health officials in Gaza said, a day after Hamas returned the remains of three hostages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைய நிறுவனங்களின் 14.9 கோடி கணக்குத் தரவுகள் கசிவு: ஆய்வறிக்கையில் தகவல்

பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகா்களை நியமிப்பது கட்டாயம்: சிபிஎஸ்இ

வரும் 27-இல் 5 மெமு ரயில்கள் முழுவதும் ரத்து

மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: வானதி சீனிவாசன்

உ.பி.யில் நடைபெறும் எஸ்ஐஆா் பணியில் முறைகேடுகள்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT